சென்னை

சென்னை நகரில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல்களில் உள்ள மதுபானக்கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தலைந்கர்  சென்னையில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் ஸ்டார் ஓட்டல்களில் எப்.எல்.-3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.

இங்கு சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை வினியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

எனவே சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 ஸ்டார் ஓட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த எப்.எல்.-3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.”

என்று கூறப்பட்டுள்ளது.