திருவனந்தபுரம்

கேரள அரசு வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை இனி உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலசரிவில் சிக்கிய ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.  அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஆனால் நிலச்சரிவு ஏற்பட்டு 3 நாட்கள் ஆனதால் நிலச்சரிவில் சிக்கியோர் இனியும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையி கேரள அரசு, இனி வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என்றும் நிலச்சரிவில் சிக்கி தப்பி பிழைத்தோர் அனைவரும் உயீருடன் மீட்கப்பட்டுள்ளதகவும் அறிவித்துள்ளது.

ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி உள்ள நிலையில் இதில் பலர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.  கேரள அரசின் இந்த அறிவிப்பு மீட்கப்படாதோர் குடும்பத்தினருக்கு கடும் துயரத்தை அளித்துள்ளது.