வாஷிங்டன்

டைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணக்கெடுப்பில் டிரம்பை கமலாஹாரிஸ் முடி உள்ளார்.

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று நடக்க உள்ள அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. எனவே அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தினர்.

இதையொட்டி அவர் அதிபரி தேர்தலில் இருந்து விலகுவதாக கடந்த 21-ந் தேதி ஜோ பைடன் அறிவித்தத்டன் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துணை அத்பர் கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அப்போதிலிருந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிசின் கை ஓங்கியது. ஆயினும் 2 முறை ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்”

எனக் கூறி ஒபாமாவும் தனது ஆதரவை தெரிவித்துவிட்டார்.

அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி டிரம்ப அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும். ஜனநாயக கட்சியில் கமலா ஹாரிசுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லாததால் விரைவில் அவரும் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிசுக்கு 44 சதவீதம் பேரும் டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்ததால் டிரம்பை விட கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத ஆதரவை பெற்று முந்தியுள்ளார்.