மாஸ்கோ

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவும், ரஷியாவும் நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்கள். இன்று இந்தியா – ரஷியா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.

மாநாட்டில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை, ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பிரதமர் மோடி மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு  சென்றபிரதமர் மோடி யை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

தற்போது மாஸ்கோவில் பிரதமர் மோடி – ரஷிய அதிபர் புதின், இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் . எரிபொருள் , வணிகம் , பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.  இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.