சென்னை

புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் தனது முதல் பணி ரவுடிகளை கட்டுப்படுத்துவது எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல்த்றை ஆணையரக நியமனம் செய்யப்பட்டு சென்னை காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார். .இதன் மூலம் சென்னையின் 110-வது போலீஸ் ஆணையராக ஏடிஜிபி அருண் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம்,

”சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதை வைத்து சொல்கிறீர்கள். காலம், காலமாக குற்றங்கள் நடந்தே வருகின்றன; அதை தடுத்து கொண்டுதான் இருக்கிறோம். குற்றங்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். பொறுப்பை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் குறையும். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி கருத்து கூற முடியாது”

என்று  கூறி உள்ளார்.