மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் சோனியா காந்தி மக்களவை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகாதாபுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

18வது மக்களவையின் புதிய சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராகுல் காந்தியை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.