காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி அங்கு மீண்டும் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அதேவேளையில் உ.பி. மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து அங்கும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் ராகுல் காந்தி.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை ரகசியமாக வைத்து வயநாடு தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டார் என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

இருந்தபோதும் அவர் இரண்டாவதாக போட்டியிட்ட ரே பரேலி தொகுதியிலும் 3.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.