சென்னை: திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பதவி ஏற்றதும், ஒய்வுபெறும் தினத்தன்று அரசு ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுத்து ரத்து செய்து அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதை மீறி,   என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கூடுதல் எஸ்.பி.வெள்ளதுரை பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.

இதைத்தொடர்ந்து,  , கூடுதல் எஸ்.பி.வெள்ளதுரை  சஸ்பெண்ட் உத்தரவை உள்துறைச் செயலர் அமுதா ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளதுரை 1997-ல் உதவி ஆய்வாளராகத் தேர்வாகி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் பணியைத் தொடங்கினார். 1998-ல் திருச்சி பாலக்கரை எஸ்.ஐ.யாகப் பணியாற்றியபோது, ரவுடி கோசி.ஜானை `என்கவுன்டர்’ செய்தார். 2003-ல் சென்னை அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வீரமணியை `என்கவுன்டர்’ செய்தார். 2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக் குழுவில் வெள்ளதுரை இடம் பெற்றார். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இவருக்கு 2 பதவி உயர்வு வழங்கப்பட்டு, டிஎஸ்பியாக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் எங்கு ரவுடிகளின் அட்டகாசம் நடைபெற்றாலும் அங்கு பதவி வழங்கப்பட்டு, ரவுடிகளை ஒழித்து கட்டி வந்தார். அதன்படி, மதுரையில்,  . 2012-ல் மதுரையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்தபோது வரிச்சியூர் செல்வம் போன்ற ரவுடிகளை ஓடுக்கினார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், வெள்ளத்துரை ஓரங்கட்டப்பட்டார். அதன்படி,  சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாக 2022-ல் நியமிக்கப்பட்ட அவர், கடைசியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை குற்றப் பதிவேடு பிரிவில் பணியாற்றினார்.

இந்த நிலையில்,  வெள்ளதுரை நேற்று (மே 31)பணி ஓய்வு பெறவிருந்தார்.  அப்போது திடீரென,  அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவதாக, உள்துறைச் செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்து இருந்தார். இது பரபரபபை ஏற்படுத்தியது. சிபிசிஐடி வழக்கு தொடர்பாக அவர்தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இது தமிழக காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஏற்கனவே அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவதை ரத்து செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதை மீறி அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  இதற்கிடையில், கூடுதல் எஸ்.பி. வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை முறைப்படி பணி ஓய்வுபெற்றார்.

இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!