டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட அதாவது கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட  57 தொகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று (ஜுன் 1ந்தேதி)  ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு   காலை 7 மணிக்கு  தொடங்கிய நிலையில் மாலை 6மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில், . உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13 மற்றும் மேற்கு வங்கத்தில் 9 இடங்கள் என மொத்தம் 57 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதில் பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டிடுகிறார்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும்   முக்கிய வேட்பாளர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மிசா பாரதி வரை பல பேர் தேர்தலில் களமிறங்குகின்றன. வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி, கோரக்பூர் தொகுதியில் ரவி கிஷன், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பாட்லிபுத்ராவில் இருந்து மிசா பார்தி, பாஜகவின் கங்கனா ரனாவத் களத்தில் உள்ளனர். இதுபோக, காங்கிரஸில் இருந்து விக்ரமாதித்ய சிங் மண்டி தொகுதியிலும்,  டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் முக்கிய தலைவர்கள் என பலரும் தங்களது தொகுதிகளில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பிலாஸ்பூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்குப்பதிவு செய்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஹர்பஜன் சிங் ஜலந்தரில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 கடந்த  ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப்பெரிய வாக்குப்பதிவு மாரத்தான் போட்டியின் பிரமாண்டமான முடிவு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்டங்கள் மற்றும் 486 மக்களவைத் தொகுதிகளை நிறைவு செய்துள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் கடந்த 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, சுமார் 5.24 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள் மற்றும் 3574 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உட்பட 10.06 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநில சட்டப் பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், நிஷிகாந்த் துபே, ரவ்னீத் சிங் பிட்டு, காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி, சரண்ஜித் சிங் சன்னி, சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் ஹர்சிம்ரத் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கவுர் பாதல், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் மிசா பார்தி. மக்களவைத் தேர்தலின் முந்தைய ஆறு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒடிசாவில் கடந்த நான்கு கட்டங்களாக மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது.