டில்லி

மலாக்கத்துறை 8 ஆம் முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அமலாக்கத்துறை டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே அமலாக்கத்துறை அரவிந்த் ஜெரிவாலுக்கு 7 முறை சம்மன் அனுப்பி இருந்தது. அவர் அமலாக்கத்துறை சம்மன்களை புறக்கணித்தார்.

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாங்கள் அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காகக்  காத்திருக்க வேண்டும். நாங்கள் இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். எனவே மோடி அரசு இது போன்ற அழுத்தத்தை உருவாக்க கூடாது” 

எனத் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை தற்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.