சென்னை

ன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னதாக தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 24 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.