ம்பால்

தங்கள் தேடுதல் பணிகளுக்கு இடையூறு செய்வதாக மணிப்பூர் காவல்துறையினர் அசாம் ரைஃபிள் படையினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. மீண்டும் கடந்த வாரத்திலும் மீண்டும் வன்முறை தாக்குதல் நடந்தது.

மணிப்பூர் காவல்துறையினர் வன்முறையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.  மணிப்பூர் மாநில்த்தி பாதுகாப்புக்காக அசாம் ரைபிள் படை உள்ளிட்ட துணை ராணுவ காவல்துறையும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த 5-ந்தேதி காவல்துறையினர் வன்முறையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள குவாக்டா-கோதோல் சாலையில், பாதுகாப்புக்கு நின்ற அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தினர்.

அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையினரைத் தொடர்ந்து செல்லவிடாமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. எனவே காவல்துறையினர் அசாம் ரைபிள் படையினர் மீது முதல் தகவலறிக்கை. பதிவு செய்து உள்ளனர்.

அசாம் ரைபிள் படையினர்,

‘குக்கி மற்றும் மெய்தி பகுதிகளுக்கு இடையே உள்ள இடையக மண்டலங்களில் அமைதி தன்மையை உறுதிப்படுத்தும் கட்டளை தலைமையகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாங்கள் பணி செய்து வருகிறோம்’

என்று விளக்கம் அளித்துள்ளனர்.