ஸ்லாமாபாத்

டும் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பாகிஸ்தானில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

file pic

தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதுடன் கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.  இதில்  நரோவல் மாவட்டத்தில் 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உட்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தவிர மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் நரோவல், லாகூர்,  சினியோட் மற்றும் ஷேக்புரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின்கசிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்கள் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வருகிற 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கவனமாக வாகனம் ஓட்டவும், மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் பல்வேறு மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]