மும்பை

டந்த 2021ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் விமானப்பயணிகள் அத்துமீறல் 37% அதிகரித்துள்ளன

நேற்று சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமப்பி துணை இயக்குநர் ஜெனரல்  கிளிஃபோர்ட் செய்தியாளர்களிடம்

”அத்துமீறலில் கடந்த 2021-ம் ஆண்டில் 835 விமானங்களுக்கு ஒரு பயணி ஈடுபட்ட நிலையில் 2022-ல் 568 விமானங்களுக்கு ஒரு சம்பவமாக அதிகரித்துள்ளது,. சென்ற ஆண்டு  விமான பயணிகளின் அத்துமீறல் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக விமானப் பணியாளர்களுடன் வாக்குவாதம், இணக்கமின்மை, வார்த்தை துஷ்பிரயோகம், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகிய சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. உடல் ரீதியான துஷ்பிரயோக சம்பவங்கள் மிகவும் அரிதான அளவிலேயே இருந்தன.

சர்வதேச விமானப் போக்குவரத்தில் 83 சதவீதத்தைக் கைவசம் வைத்திருக்கும் 300 விமான நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.  விமானத்தில் ஒரு பயணியின் அத்துமீறல் என்பது ஏனைய அனைத்து பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி விடுகிறது.

விமானங்களில் சிகரெட் புகைத்தல், சீட் பெல்டை போட மறுத்தல், மது அருந்துதல் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதைப் போல அத்துமீறல்களில் ஈடுபடும் பயணிகளை மாண்ட்ரீல் விதி முறை 2014-ன் கீழ் தண்டனைக்கு உட்படுத்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனத் தெரிவித்துள்ளார்.