2020ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா-வாக தேர்வான மரியானா வரேலா மற்றும் 2020 மிஸ் போர்ட்டோ ரிக்கோ-வாக தேர்வான ஃபேபியோலா வாலண்டைன் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து அக்டோபர் 28 ம் தேதி தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இவர்கள் தாங்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தனர்.

2020 ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் அழகிப் போட்டியின் போது இருவரும் சந்தித்ததாகவும் அப்போது முதல் இருவரும் காதல் வயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் மரியானா வரேலா.

தற்போது தங்கள் காதலை உலகறியச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அதனால் இரண்டு ஆண்டுகளாக மூடிவைத்திருந்த தங்கள் காதலை திருமணம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

https://twitter.com/cerotez/status/1587557369780707328

இருவரும் தற்போது தங்கள் விடுமுறையை கழித்து வரும் நிலையில் இவ்விரு அழகிகளின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக வலம்வந்து கொண்டிருக்கிறது.