மணிலா
இன்று வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் திடீர் என நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 எனப் பதிவாகி உள்ளது.
நில நடுக்கத்தால் பல வீட்டு ஜன்னல்கள் உடைந்துள்ளன.
பொதுமக்கள் கடும் பீதியுடன் வெளியே வந்து வெட்ட வெளியில் கூட்டம் கூட்டமாக நின்றுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel