போர்ட் ஆப் ஸ்பெயின்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது.

309 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 305 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற போட்டி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.