கொழும்பு:
லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள தகவலில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி ராஜினாமா செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் இலங்கை அரசியல் சாசன விதிகளின் படி சபாநாயகர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.