கெய்ரோ:
எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைநகர் கெய்ரோவின் வடக்கே பெஹெய்ராவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிரைசைக்கிளில் பயணித்த 12 பயணிகளில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், மற்ற நால்வரும் விபத்தில் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel