சென்னை
இனி மு க ஸ்டாலினால் சுட்டிக் காட்டப்படுபவரே பிரதமர் ஆவார் என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம் பி கோவை நாகராஜன் கூறி உள்ளார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன் உள்பட சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அ.ம.மு.க, த.ம.க, பா.ம.கா, கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 மேற்பட்டோர் தி மு கவில் இணைந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாகராஜன், ”என்னைப் பின்தொடர்ந்து ஏராளமான அதிமுகவினர் திமுகவில் இணைவார்கள். தலைவர் ஸ்டாலின் கோவையை முதன்மை மாவட்டமாக மாற்ற உறுதி அளித்துள்ளார். இனி அவரால் சுட்டிக்காட்டப்படுபவரே பிரதமர் ஆவார்” என்று நா கூறினார்
மேலும், “நான் கோவை மாவட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவதற்கு பணியாற்றுவேன் ராமனுக்கு அணில் போலக் கோவை மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு முதல்வருக்குத் துணையாய் இருப்பேன். இனி எதிர்காலம் திமுகவிடம் தான் இருக்கிறது. நான் ஓபனிங் பேட்மேன் இனி ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என அவர் தெரிவித்தார்.