மதுரை: மதுரையில், 8வயது சிறுவன் தாலி எடுத்துக்கொடுத்து, கல்லூரி பேராசிரியையான தனது தாயாருக்கு மறுமணம் செய்துவந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை   திருமங்கம் பகுதியைச்  சேர்ந்தவர் ஓவியர் ஆதிஸ் இவருக்கும்,  திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரன் என்பவருக்கும் நேற்று திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், சுபாஷினியின் 8வயது மகன் தாலியை எடுத்துக்கொடுத்து, அதை ஆதிஸ், சுபானியினின் கழுத்தில் கட்டினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது.

சுபாஷினி  ஆங்கிலத் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி. இவரை கணவரை முறைப்படி விவாகரத்து செய்தவர். இவருக்கு 8  வயதில் மகன் இருக்கிறார். அவரது பெயர்  தர்ஷன்.

சுபாஷினிக்கு  ஆதீசுடன் மறுமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எ  குடும்பத்தினர் முன்னிலையில் திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவிலில்  திருமாங்கல்யத்தை சுபாஷினியின் மகன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஆதிஸ், மணமகள் சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். பின்னர் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன.

இத்திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இத்திருமண நிகழ்வு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகனின் ஆசியோடு திருமணம் செய்து கொண்ட பேராசிரியைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.