சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 162 பேரும் கோவையில் 231 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,542 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,08,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,835 பேர் உயிர் இழந்து 25,56,116 பேர் குணம் அடைந்து தற்போது 17,797 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,43,408 பேர் பாதிக்கப்பட்டு 8,391 பேர் உயிர் இழந்து 5,33,095 பேர் குணம் அடைந்து தற்போது 1,922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 231 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,35,273 பேர் பாதிக்கப்பட்டு 2,257 பேர் உயிர் இழந்து 2,30,909 பேர் குணம் அடைந்து தற்போது 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,976 பேர் பாதிக்கப்பட்டு 2,429 பேர் உயிர் இழந்து 1,61,406 பேர் குணம் அடைந்து தற்போது 1,141 பேர் சிகிச்சையில் உள்ளனர்.