சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 170 பேரும் கோவையில் 181 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,573 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,05,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,788 பேர் உயிர் இழந்து 25,52,507 பேர் குணம் அடைந்து தற்போது 18,352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,43,065 பேர் பாதிக்கப்பட்டு 8,387 பேர் உயிர் இழந்து 5,32,676 பேர் குணம் அடைந்து தற்போது 2,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 181 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,34,820 பேர் பாதிக்கப்பட்டு 2,249 பேர் உயிர் இழந்து 2,30,439 பேர் குணம் அடைந்து தற்போது 2,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,740 பேர் பாதிக்கப்பட்டு 2,427 பேர் உயிர் இழந்து 1,61,210 பேர் குணம் அடைந்து தற்போது 1,103 பேர் சிகிச்சையில் உள்ளனர்.