தாய்லாந்து:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையாக ஃபுக்கட் சாண்ட் பாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தீவுக்குள் தனிமைப்படுத்தல் இன்றி அனுமதிக்கப்படுவார்கள்.நாட்டின் பிற பகுதிகளுக்கு 14 நாட்களுக்குபிறகு செல்லலாம்.