சென்னை: கோதையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து, ராதாபுரம் கால்வாய் 17ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகளின் பாசனத்திற்கு 16ந்தேதி முதல் 31ந்தேதி வரை வினாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel