
முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி, தனது மார்க்கெட் சரியவே, சில படங்களில் ஐயிட்டம் சாங்குக்கு ஆடினார். ஆனால் இப்போது அதற்கு மறுத்துவருகறார்.
“படத்தில் முக்கிய கேரக்டர் என்றால்தான் கால்ஷீ’ட். இல்லாவிட்டால் நோ” என்று சொல்கிறார்.
தனுஷ் நடித்து வரும் கொடி படத்தில். த்ரிஷாவும் அஞ்சலியும் நடிப்பதாக இருந்தது. அதிலிருந்து அஞ்சலி விலகினார் அல்லவா… அதற்குத்தான் இப்படி ஒரு விளக்கத்தச் சொல்கிறார் அஞ்சலி.
அந்த படத்தில் அஞ்சலிதான் ஹீரோயின். த்ரிஷாவுக்கு வில்லி கேரக்டர்தான். ஆனாலும் அந்த வில்லி கேரக்டருக்குத்தான் படத்தில் முக்கியத்துவமாம். அதனால்தான் விலகியிருக்கிறார் அ்ஞ்சலி.
“தமிழில் பேரன்பு மற்றும் எம் ஜி ஆர் ஆகிய படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. விமல் உடன்மாப்ள சிங்கம் படத்தில் நடிக்கிறேன். அதோடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இறைவி படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் வெளியாகப்போகிறது. எல்லாவற்றிலுமே முக்கியமான கேரக்டர்கள்தான்” என்கிறார் அஞ்சலி.
Patrikai.com official YouTube Channel