அறிவோம் தாவரங்களை – நிலப்பனை
நிலப்பனை. (Curculigo Orchioides).
தரிசு நிலங்களில் தானாக வளரும் தங்கச் செடி நீ !
மருந்தாக பயன்படும் கிழங்குச் செடி நீ !
புணர்ச்சியில் இச்சை தரும் வயாகரா நீ!
ஆங்கிலத்தில் நீ ‘கோல்டன் ஐ கிராஸ்’!
35 செ.மீ. வரை உயரம் வளரும் முதன்மை செடி நீ!
மேக முத்திர வெப்பம், வெண்குஷ்டம், விலா குத்தல், ஒழுக்கு பிரமேகம், நீலஞ்சன நோய், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, ஆண்/பெண் மலடு, ஆண்மை அதிகரிப்பு, நரம்பு தளர்ச்சி, மூச்சுக் குழாய் அழற்சி, கண் அழற்சி,அஜீரணம் , வாந்தி வயிற்றுப்போக்கு ,இடுப்புவலி ,நாய்க்கடி, மூட்டுவலி இரைப்பை & குடல் வலி, காய்ச்சல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
உடலுக்குப் பலம் தரும் உன்னத செடியே!
தங்க நிற பூக்கொடுக்கும் கற்பக செடியே !
ஈட்டிவடிவஇலைசெடியே!
வீட்டிலும் வளரும் நாட்டுச் செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📞9443405050