சென்னை

மிழகத்தில்  இன்றைய (09/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 469 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,391 பேர் உயிர் இழந்து 8,26,011 பேர் குணம் அடைந்து தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,32,603 பேர் பாதிக்கப்பட்டு 4,118 பேர் உயிர் இழந்து 2,26,935 பேர் குணம் அடைந்து தற்போது 1,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,905 பேர் பாதிக்கப்பட்டு 674 பேர் உயிர் இழந்து 53,773 பேர் குணம் அடைந்து தற்போது 458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,875 பேர் பாதிக்கப்பட்டு 771 பேர் உயிர் இழந்து 50,848 பேர் குணம் அடைந்து தற்போது 256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.