சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இந்தியாவைவிட 400 ரன்களுக்கும் மேல் முன்னிலைப் பெற்றுள்ளது.

தனது முதல் இன்னிங்ஸ்படி, 241 ரன்கள் முன்னிலைப்பெற்ற இங்கிலாந்து, இந்தியாவுக்கு பாலோஆன் கொடுக்காமல், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தற்போதைய நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம், இந்தியாவைவிட மொத்தமாக 406 ரன்களை முன்னிலைப் பெற்றுள்ளது இங்கிலாந்து.

சேப்பாக்கம் பிட்ச், பந்துவீச்சிற்கு சாதமாக மாறியுள்ளதாக கூறப்படும் நிலையில், பெரிய இலக்கை எட்டி, வெற்றிபெறுவது என்பது இந்தியாவுக்கு சாத்தியமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்திய சீனியர் பேட்ஸ்மென்கள் சிலர், பொறுப்பற்ற முறையில் ஆடிவருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்தபட்சம், இந்திய அணி போட்டியை டிரா செய்ய முயலுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.