சென்னை: சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதியின் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குளிர் நிலவி வருவதால், மழை வர வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.  ஆனால், வானிலை ஆய்வு மையமோ, குளிர் நிலவினாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக, ஜனவரி 10ந்தேதி வரை அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று அதி காலை முதலே சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சற்று கனமான மழையும், பல இடங்களில் சாரல் மழையும் துறி வருகிறது.

அதிகபட்சமாக  சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிருந்து வருகிறது.  மழை காரணமாக  சென்னையில் குளிர்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.