சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தென்மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் 12 செமீ, கூடலூர், ஸ்ரீவைகுண்டம் 8 செமீ, பாளையங்கோட்டை தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
கேரள கடற்பகுதி, லட்ச தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]