சென்னை
தமிழகத்தில் இன்று 5692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இதுவரை 5,63,691 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 88,874 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 66,08,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 13 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
இதுவரை 5,63,691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 9,076 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,470 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 5,08,210 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 46,405 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel