சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

முன்னதாக அந்நாட்டில் ஜூனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அலகில் பதிவானது. இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிலி நாடானது, தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு என்று அழைக்கப்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]