டில்லி:
மீண்டும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கி உள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு 7 நாட்கள் தங்கியிருந்து அதிபர் டிரம்ப உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அரசு முறைப்பயணமாக இன்று முதல் ( 21) 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நள்ளிரவு பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
Patrikai.com official YouTube Channel