சென்னை: அரசு துறைகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ந்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

சார்பதிவாளர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு இன்றுமுதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 50 குரூப் 2 மற்றும் 595 குரூப் 2A சேவைகளுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் 2025 குரூப் 2 மற்றும் 2A அறிவிப்பை வெளியிட்டது.
விண்ணப்பதாரர்கள் பிரத்யேக விண்ணப்ப தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். TNPSC குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 13, 2025 ஆகும்.
விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பப் படிவத்தில் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28, 2025 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 28-ந்தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.
