சென்னை: தமிழ்நாடு  மாநில பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை  அரசில் தொடர்பான மேல்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பாக படிக்க உள்ளார். இதனால், அடுத்த மாதங்கள் கட்சியினரையும், கட்சி பணிகளையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில்,  பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர்  அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர பாஜகவின் தேசிய தலைமை அனுமதி அளித்தது. அதன்படி  அவர் 3 மாத பயணமாக  லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்; நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்ப உள்ளார்.

அண்ணாமலை திரும்ப வரும்வரை தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க எச்.ராஜா உட்பட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுவின்  ஒருங்கிணைப்பாளராக ராஜா செயல்படுவார். குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து முடிவு செய்யும். மேலும்,  ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.