தராபாத்

தெலுங்கானா முன்னாள் முதவ்வர் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சியின் 6 எம் எல் சி க்கள் இணைந்துள்ளனர்.

தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேலவை உறுப்பினர்கள்) காங்கிரசில் இணைந்துள்ளனர்.

அதாவது தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வ்ருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்களும் காங்கிரசில் இணைந்துள்ள்னர்.

ஏற்கனவே பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், சஞ்சய்குமார், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரசில் இணந்ர்க்எ. இவ்வாறு தொடர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியின் உறுப்பினர்கள் காங்கிரசில் இணைவதால் அக்கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.