சென்னை:  இளநிலை பொறியாளர்கள் உள்பட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..  என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன். 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேர்வான 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். உதவி பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியவதாது,  இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர் என்று கூறியவர்,   திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு என்றும்,  அதனால்  தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது.  தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைத்து துறை கூட்டு முயற்சியால் கிடைத்துள்ளது.  தற்போது இரட்டை இலக்கில் வளர்ச்சி அடைந்த  ஒரே ஒரு மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன். இது சாதாரண வெற்றியல்ல, நெருக்கடி, அவதூறுகளுக்கு இடையே நாம் அடைந்த சாதனை என்றார்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரித்து வருகிறோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இதுவரை தேர்வாணையம், பொதுத்துறைகள் மூலமாக 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.  நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணியில் உள்ளனர்.  கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் திட்டமிட்டு செயலாற்றுகிறோம் என்றவர், கடந்த  4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.

இதுவரை தமிழ்நாடு அரசின் நகராட்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றவர்,   நான் முதல்வன் திட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.  தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு விளையாட்டு துறை மூலம் 84 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அமைதியான சூழல், சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான இளைஞர்கள் காரணமாக நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

 தமிழக பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்கிறேன். தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கமாக வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.  ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருந்தது.  தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது. * பட்ஜெட்டில் நாம் கணித்ததை விட 2.2 விழுக்காடு அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளோம்.

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.  இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளது.  தமிழக மக்களுக்கு வெற்றி செய்தியை காணிக்கையாக்குகிறேன்.  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தான் நேற்று இரவிலிருந்து talk of thd town, talk of the nation ஆக உள்ளது.  நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.  இன்னும் அதிகமான உயரத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் துணைமுதல்வர் உதயநிதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.