சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் அதிநவீன சிக்னல்களை அமைக்க தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது. ,இதற்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மழைநீர் கால்வாய் அமைப்பு என பல பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகளில் கடுமையான போக்குவரத்து காணப்படுகிறது. மேலும்,  அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிர்நாடு போக்குவரத்து காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில்  சில நிமிடங்கள் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலம் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. சிக்னல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி,  சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 55 சந்திப்புகளில் “அடாப்டிவ்” சிக்னல்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிக்லானது,  பழைய  சிக்னல்களை போல் அல்லாமல் தற்போதைய போக்குவரத்து நிலையின் அடிப்படையில் காத்திருப்பு நேரம் மாறும் வகையில் , போக்குவரத்தை சரி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது அதில் உள்ள காமிராக்கள் வாகன நெரிசலை கண்காணித்து, அதற்கு தகுந்தாற்போல சிக்னல்கள் செயல்படுத்தும்.

இந்த புதிய  ‘அடாப்டிவ்’ சிக்னல்கள் பரபரப்பான சாலைகளுக்கு பச்சை விளக்கை 120 வினாடிகள் வரை நீட்டிக்கலாம் மற்றும் குறைவான நெரிசல் உள்ள சந்திப்புகளுக்கு அதை 30 வினாடிகளாக குறைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய சிக்னல்கள்,  பழைய மகாபலிபுரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கிராண்ட் டிரங்க் சாலை போன்ற முக்கிய வழித்தடங்களில் 30 சிக்னல்கலை நிறுவவும், காலாவதியான 25 சிக்னல்களை மாற்றவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. தரமணி லிங்க் ரோடு-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, நொளம்பூர் மெயின் ரோடு- பாரதி சாலை சந்திப்பு ஆகிய சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.

சென்னை போக்குவரத்து காவல் துறையின் இந்த திட்டத் திற்கு ரூ.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சிக்னல்கள் போக்கு வரத்து தேவையை மதிப்பிடு வதற்கும் காத்திருப்பு நேரத்தை கண்டறிந்து தானாகவே மாற்றுவதற்கும் வாகனத்தை கண்டறியும் சென்சார்களை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.