உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பின் இன்று பத்திரமாக மீட்கப்படுகின்றனர்.

இதுவரை 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரையும் ஸ்ட்ரெட்சர் மூலம் கயிறு கட்டி மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.