டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் ஒரு கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

‘தமிழ்நாட்டில் 243, மேற்கு வங்கத்தில் 294, கேரளாவில் 140, அசாமில் 126 மற்றும்புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை ஒரேந ளான மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற ஆயுட் காலம் மே முதல் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதையடத்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு, இன்று மாலை வெளியிடப்பட்டது. ‘
தமிழ்நாட்டில் 243, மேற்கு வங்கத்தில் 294, கேரளாவில் 140, அசாமில் 126 மற்றும் புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘5 மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
‘உங்கள் ஒட்டு உங்கள் உரிமை’ என்பதை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தேர்தலை பார்வையிட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வருகின்றனர். 5
மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. 5 மாநிலங்களில் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும சேர்த்து, மொத்தம் 8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்.
ECINET செயலி
இந்த தேர்தலில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1200 பேர் தான் வாக்களிக்க முடியும். ECINET செயலியில் வாக்காளர்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணை :
தமிழ்நாடு :
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 30
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 06
வேட்பு மனு பரிசீலனை: ஏப்ரல் 07
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் 09
வாக்குப் பதிவு: ஏப்ரல் 23 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை: மே 4 (திங்கட்கிழமை)
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி, தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பி.எல்.ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 09 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம் : மார்ச் 16
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
வேட்பு மனுப் பரிசீலனை: மார்ச் 24
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: மார்ச் 26
வாக்குப்பதிவு: ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை: மே 4
கேரளம்
கேரளம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 09 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 16
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
வேட்பு மனுப் பரிசீலனை: மார்ச் 24
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: மார்ச் 26
வாக்குப்பதிவு: ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை: மே 4
அசாம்
அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 09 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 16
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
வேட்பு மனுப் பரிசீலனை: மார்ச் 24
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: மார்ச் 26
வாக்குப்பதிவு: ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை: மே 4
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டம் (152 தொகுதிகள்)
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 30
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 06
வேட்பு மனுப் பரிசீலனை: ஏப்ரல் 07
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் 13
வாக்குப்பதிவு: ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை: மே 4
2ஆம் கட்டம் (142 தொகுதிகள்)
வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: ஏப்ரல் 02
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 09
வேட்பு மனுப் பரிசீலனை: ஏப்ரல் 10
வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் 13
வாக்குப்பதிவு: ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை: மே 4
தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் அசாமில் பாஜக போன்ற கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் என பாஜகவிற்கு நேர் எதிர் அரசியல் செய்யும் 3 முக்கிய மாநிலங்களின் தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல புதுச்சேரியிலும், அசாமிலும் அக்கட்சி ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் இருந்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது.
[youtube-feed feed=1]