டெல்லி: 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 2021ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந் நிலையில்மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய் பல்லாவுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்கு தேவையான மத்திய மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.