சென்னை

குஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 18 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இதில்  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி திருவேங்கடம்,  ஜூலை 14ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.