சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்க ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ரயில் எண் 22158 சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்எம்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று காலை 06.35 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சேவை, லோனாவலா, கர்ஜத், பன்வெல் மற்றும் தானே வழியாக திசைமாற்றப்பட்டு இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக பன்வெல் மற்றும் தானே ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும் என ஒன்றிய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 12164 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று மாலை 18.25 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும், இது லோனாவலா, கர்ஜத், பன்வெல் மற்றும் தானே வழியாக திசைமாற்றப்பட்டு இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக பன்வெல் மற்றும் தானே ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.
ரயில் எண் 11014 கோயம்புத்தூர் – லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று காலை 08.50 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து புறப்படும், இது லோனாவலா, கர்ஜத், பன்வெல் மற்றும் தானே வழியாக திசைமாற்றப்பட்டு இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக பன்வெல் மற்றும் தானே ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.