சென்னை: தமிழ்நாட்டில், மார்ச் 2ந்தேதி முதல் 3 எக்ஸ்பிரஸ்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி வழியாக இயக்கப் படும் மூன்று முக்கிய அதிவிரைவு ரயில்களின் கால அட்டவணை வருகிற மார்ச் 2ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது என  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மங்களூர் அதிவிரைவு ரெயில் (16159) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு திருச்சியை 4.40 மணிக்கு வந்தடைகிறது. 15 நிமிட காத்திருப்புக்குப் பிறகு 4.55 மணிக்கு புறப்பட்டு மங்களூர் ரெயில் நிலையத்தை இரவு 7.15 மணிக்கு சென்றடைகிறது.

மலைக்கோட்டை விரைவு ரெயில் (12653)  சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி ரெயில் நிலையத்தை அதிகாலை 4.55 மணிக்கு வருகிறது.

மங்களூர் – புதுச்சேரி வாராந்திர ரெயில் (16858) வரும் மார்ச் 6-ந்தேதி முதல் திருச்சி ரெயில் நிலையத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து 5.30 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலம் ரெயில் நிலையத்தை காலை 7.20 மணிக்கு சென்றடையும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.