மொன்டானா: 
மெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார்.
சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 140 பயணிகளும் 16 சிப்பந்திகளும் இருந்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் தெரிவித்தது.