சென்னை

ன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக பட்ஜெட் குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

விரைவில் தமிழகத்தில் தாக்கல்  செய்யப்ப ட உள்ள 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

கடந்த பிப். 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இறுதி முழு பட்ஜெட் என்பதால் மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்களால் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இடம் பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக சட்டசபை கூடிய முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டில் மக்களின் விருப்பங்களை இடம் பெறச் செய்யும் வகையில் பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு முன்பதாக அரசுத் துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள், சங்கங்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்திருந்தது

இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (18-ந் தேதி) தலைமை செயலகத்தில் தொடங்கிது 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் இன்று ஊரக வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வுதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.  நாளை (19-ந் தேதி) வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், 20-ந் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.