சென்னை: தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி,  பிப்ரவரி 1ந்தேதி (இன்று) முதல்  ஏப்ரல் மாதம் வரையிலான சுமார் 3 மாத காலம்,  நாள் ஒன்றுக்கு  2ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் தளர்வுகள் காரணமாக தமிழகம் முழுவதும   கடந்த 10 மாதங்களாக கல்வி நிறுவனங்கள்  மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுதது, கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் கல்வி பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில்,  தமிழகஅரசு சார்பில்அந்த வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இணைய வழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும்,  நாள் ஒன்றுக்கு  தினசரி 2 ஜி டேட்டா வழங்கப்படும். இந்த இலவச டேட்டா திட்டம்  ஏப்ரல் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.