ஜால்னா

காராஷ்டிராவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு விபத்தில் 22 தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

பாய்லர் வெடித்தபோது உருகிய இரும்புக் குழம்பு தொழிலாளர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மீது இந்த சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.