சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில்  மேலும் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று ஒரே நாளில் 1,58,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,99,255 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில்,  இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,686 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பிடியில் இருந்து  1,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 25,45,178 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் 19,391 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 205 பேருக்கும், சென்னையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், தஞ்சாவூரில் 95பேருக்கும், சேலத்தில் 79 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.